புது தில்லி : உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக U.U.லலித் பெயர் பரிந்துரை !

புது தில்லி : உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக U.U.லலித் பெயர் பரிந்துரை !

உச்ச நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக இருக்கும் நீதிபதி, N.V. ரமணா கடந்தாண்டு ஏப்ரலில் பதவியேற்றார். இவரது பதவி காலம் வரும் 26ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதனையடுத்து, மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சக செயலாளர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி N.V. ரமணாவுக்கு அனுப்பியுள்ள தகவலில் உச்சநீதிமன்றத்தில் அடுத்த தலைமை நீதிபதி பெயரை பரிந்துரை செய்யுமாறு வலியுறுத்தினார்.

அதன்படி அடுத்த தலைமை நீதிபதியாக U.U. லலித் என அழைக்கப்படும் உதேய் உமேஷ் லலித்தை நியமிக்க N.V.ரமணா மத்திய அரசுக்கு பரிந்துரைசெய்துள்ளார். இந்தன் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் வரும் 27ம் தேதி உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக அவர் பதவி ஏற்பார். எனினும், U.U.லலித் வரும் நவம்பர் 2022 8ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.